Testimonials

DR.P.DEIVEEGAN M.D

CURE HOSPITAL, KARUR MAIN ROAD, VELLAKOVIL.

           1990 – 1992 ம் ஆண்டுகளில் நான் S.S.V மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10 ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தேன் பின்பு 1992 முதல் 1994 முடிய அதே பள்ளியில் +1 மற்றும் +2 வகுப்புகளில் படித்தேன். அந்த பள்ளியில் பயின்ற போது கிடைத்த அனுபவம் தான் என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. இப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. இப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள பெரியவர்கள் ஆசிரியப் பெருமக்கள் கற்றுக்கொடுத்த ஒழுக்கம், அறிவு என் வாழ்க்கையை பிரகாசமாக ஒளிரச்செய்தது. நான் படிக்கும் காலத்தில் விளையாட்டு மைதானத்தில் மரங்களை நட்டார்கள் அப்போது அந்த மரத்திற்கு தண்ணீரை ஊற்றி வளர்க்க எனக்கு வாய்ப்பு கிட்டியது, இன்று அந்த மரம் உயர வளர்ந்து நிழல் கொடுத்து வருவதை எண்ணும் போது என் மனம் அளவிலா பேரின்பம் அடைகிறது. நான் பள்ளிக்கு வரும்போதெல்லாம் அந்த மரத்தைப் பார்க்கும் போது என் மனம் பரவசமடைகிறது.

          மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் நீதி போதனைகளையும் கொடுத்தது இந்த S.S.V பள்ளிதான்.

                    மேலும் இப்பள்ளி ஒரு கோவிலைப் போன்றது. இப்பள்ளியில் படித்து பட்டம் பெற்ற அனைவருமே நல்ல உயர் பதவிகளைப் பெற்று வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் மருத்துவராக வருவதற்கும் மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு பணியாற்றிட தூண்டியதும் இப்பள்ளிதான். நான் பயின்ற S.S.V பள்ளியைப் போலவே நானும் ஒரு தனியார் பள்ளியை நிறுவி கிராமப்புற மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய கல்வியை வழங்கி வருகின்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

           மேலும் இப்பள்ளி வரும் காலங்களில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான சிறப்பான பள்ளியாக உருவாக வேண்டும் என்பது என் அவா.