TMT.SUBBULAKSHMI JAGADEESAN
EX.STATE AND CENTRAL MINISTER , VADAKKUPUDHUPPALAYAM
மத்திய மாநில அமைச்சராக பணிபுரிந்த நான் S.S.V பள்ளியின் முன்னாள் மாணவி. எனது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உயர்நிலைக் கல்வியை S.S.V உயர்நிலைப்பள்ளியில் 1957 முதல் 1963 வரை பயின்றேன். எனது பட்ட படிப்பை சீதாலட்சுமி ராமாசாமி கல்லூரி, திருச்சியில் பயின்றேன். சாராதா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சேலத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.
1969 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1977 ஆண்டு மே மாதம் முடிய 8 ஆண்டுகள் S.S.V மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தேன்.
1977 ம் ஆண்டு எனது அரசியல் வாழ்க்கை துவங்கியது. 1977 ம் ஆண்டு முதல் 1980 ம் ஆண்டு முடிய தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக பணியாற்றினேன்.
1989 ம் ஆண்டு முதல் 1991 ம் ஆண்டு முடிய தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சராகப் பணியாற்றினேன். 1996 ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு வரை மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன்.
2004 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு முடிய மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராகப் பதவி வகித்தேன். தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தில் துணைப் பொதுச் செயலாளராக உள்ளேன்.
S.S.V உடனான எனது நினைவுகள் அதில் ஒரு மாணவியாகவும் , அப்பள்ளியில் பணியாற்றிய ஒரு ஆசிரியையாகவும் என்றும் எனது மனதில் மிகவும் பசுமையாக உள்ளது.
ஒரு ஆசிரியையாகவும், பொது வாழ்க்கையிலும் தன்னம்பிக்கையுடன் மிகச்சிறந்த முறையில் பணியாற்றிட எனக்கு அடிப்படையாக இருந்தது, இக்கல்வி நிறுவனத்தில் நான் பெற்ற நல்ல அனுபவங்களே ஆகும் என பெருமையுடன் கூற விழைகிறேன்.